அதிரடியாக உயர்ந்த பங்குச்சந்தைகள்!
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் அதிரடி ஏற்றத்தை கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 610.80 புள்ளிகள் உயர்ந்து 33,917.94 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 33,962.48 என்ற அளவில் இருந்தது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்ஃடி 194.55 புள்ளிகள் உயர்ந்து 10,421.40 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,433.65 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.
பங்குச்சந்தை புள்ளிகள் உயர்வினால் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. இதில் பாரதி ஏர்டெல், வேதாந்தா, ஐடிசி, ஐஓசி, தேசிய அனல் மின் கழகம், ஹீரோ மோட்டோகார்ப், எஸ் பேங்க் உள்ளிட்டவை அடங்கும். கோல் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் விலை குறைந்தன.
newstm.in