1. Home
  2. வர்த்தகம்

பட்ஜெட் நாளில் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை!

பட்ஜெட் நாளில் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான இன்றும் பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிறைய வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு, பங்குச் சந்தையில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது.

ஆனால், இதற்கு மாறாக வழக்கம்போல் இன்றும் பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடனே தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தை வர்த்தக குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் ஏற்றத்துடன் 36,405 புள்ளிகளுடன் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 39 புள்ளிகள் ஏற்றம் கண்டு 10,869 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமம். பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்டவற்றின் பங்குகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like