1. Home
  2. வர்த்தகம்

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!


தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன. பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 184.21 புள்ளிகள் அதிகரித்து 34,153.85 என்ற புள்ளிகளில் முடிந்தது.அதிகபட்ச புள்ளிகளாக வர்த்தக நேர முடிவில் 34,174.39 என காணப்பட்டது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 54 புள்ளிகள் உயர்ந்து 10,558.35 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக இறுதியில் 10,563.00 என இருந்தது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, எஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, டாக்டர் ரெட்டி லேப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.

newstm.in

Trending News

Latest News

You May Like