பங்குச்சந்தை சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரிப்பு
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 251.29 புள்ளிகள் அதிகரித்து 35,511.58 என்ற புள்ளிகளில் முடிந்தது. வர்த்தக முடிவில் 35,522.50 என்ற அதிகபட்ச புள்ளிகளை தொட்டது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 77.70 புள்ளிகள் உயர்ந்து 10,894.70 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக வர்த்தக நேர இறுதியில் 10,904.25 என்ற புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, அதானி போர்ட்ஸ், எஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், இன்போசிஸ், சன் பார்மா, பவர் கிரிட், மாருதி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
newstm.in