பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு!
தொடர்ந்து பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தை சந்தித்துள்ளன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை 35,525.30 என்ற புள்ளிகளில் தொடங்கியது. பிற்பகலில் 35,743.08 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ், வர்த்தக நேர முடிவில், 209 புள்ளிகள் அதிகரித்த 35,692.52 என்ற கணக்கில் முடிவுற்றது.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 10,816.5 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 55.90 புள்ளிகள் உயர்ந்து 10,842.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக 10,856யைத் தொட்டது.
இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி, டாக்டர் ரெட்டி லேப்ஸ், எஸ்பிஐஎன், இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தும், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, எஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் விலை குறைந்தும் காணப்பட்டது.
newstm.in