பங்குச்சந்தை சென்செக்ஸ் 140 புள்ளிகள் உயர்ந்தன!
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 141.52 புள்ளிகள் அதிகரித்து 34,297.47 என புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக பிற்பகல் நேரத்தில் சென்செக்ஸ் 34,535.08 என்ற புள்ளிகளை தொட்டது.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 44.60 புள்ளிகள் உயர்ந்து 10,545.50 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. அதிகபட்சமாக 10,618.10 என்ற புள்ளிகளை எட்டியிருந்தது.
இன்றைய வர்த்தகத்தின்போது, ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன், இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன. பாரதி ஏர்டெல், எல்&டி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
newstm.in