பங்குச்சந்தை நிலவரம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 139.42 புள்ளிகள் உயர்ந்து 33,136.18 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. அதிகபட்சமாக காலை நேரத்தில் 10,227.30 என்ற அளவில் இருந்தது.
அதேபோல் தேசியப்பங்குச்சந்தை நிப்ஃடி 30.90 புள்ளிகள் உயர்ந்து 10,155.25 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. மேலும், 10,227.30 என்ற அதிகபட்ச புள்ளிகளை எட்டியது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, எச்டிஎப்சி, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல்&டி, மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஈச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.
newstm.in