முதலீட்டாளர்கள் முழிபிதுங்கல்: சந்தையில் கடும் ஏற்ற இறக்கம்
பங்குச் சந்தையில் இன்று கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டதால், சந்தையின் போக்கை கணிக்க முடியாமல் முதலீட்டாளர்கள் தவித்தனர்.
காலை வர்த்தகம் துவக்கம் முதல், வர்த்தக நேரம் முடியும் வரை, இந்த நிலை தொடர்ந்தது. இறுதியில், தேசிய பங்கு சந்தை குறியீட்டெண், ஒரே ஒரு புள்ளி உயர்ந்து, 10,906 ஆகவும், மும்பை பங்கு சந்தை குறியீட்டெண், 12 புள்ளிகள் உயர்ந்து, 36,386ஆகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாள் என்பதால், சந்தையின் போக்கை கணிக்க முடியாத முதலீட்டாளர்கள், பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். திங்கள் அன்று, வர்த்தகம் எப்படி துவங்கும் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
newstm.in