பங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவு
பங்கு சந்தையின் இன்று கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. எனினும்,வர்த்தக நேர முடிவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்து,10,849 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 86 புள்ளிகள் உயர்ந்து, 36,195 புள்ளிகளுடன் நிறைவடைந்தது
இன்றைய வர்த்தகத்தில், சந்தையின் போக்கு, பல முறை ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. இது, முதலீட்டாளர்களை அச்சம் அடைய செய்தது. எனினும், வர்த்தக நேர முடிவில், சந்தையின் போக்கு கீழிறங்காமல் இருந்ததால், முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
newstm.in
newstm.in