26-06-2018 பங்குச்சந்தைகள் சிறிது ஏற்றத்துடன் முடிந்தது!
நேற்று படுசரிவை சந்தித்த பங்குச்சந்தைகள் இன்று சற்று ஏற்றத்துடன் முடிவுற்றன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 35,355.72 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 19.69 புள்ளிகளே அதிகரித்த நிலையில் 35,490.04 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. பிற்பகலில், 35,616.64 என்ற அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டது.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,742.70 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 6.70 புள்ளிகளே உயர்ந்து 10,769.15ல் வர்த்தகமானது.
மேலும், இன்றைய வர்த்தக நிலவரப்படி, கோல் இந்தியா, டிசிஎஸ், மாருதி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்து காணப்பட்டன.
அதே நேரத்தில், டாடா மோட்டர்ஸ்,ரிலையன்ஸ், பவர் கிரிட், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை குறைந்தன.
newstm.in