எஸ்.பி.ஐ., சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பம் வரவேற்பு
பாெதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில், காலியாக உள்ள, சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அந்த வங்கி திட்டமிட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் காலியாக உள்ள, 31 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு, தகுதியுடையோர், இம்மாதம், 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். sbi.co.in என்ற வங்கியின் இணையதளத்தில் முழு விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
விண்ணப்பதாரர்கள் இதில் தேர்வானால், ஆண்டிற்கு, 15 லட்சம் முதல், 52 லட்சம் வரை சம்பளம் பெறும் வாய்ப்பை பெறலாம்.
newstm.in
newstm.in