1. Home
  2. வர்த்தகம்

எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்... அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்...!

எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்... அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம்...!

திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில், அலுவலக உதவியாளர். இரவுக்காவலர், சுருக்கெழுத்தர், தட்டசர்சர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 14.12.2018 அறிவிப்பின்படி ஏற்கனவே விண்ணப்பங்களை அனுப்பியவர்கள மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் போன்ற பணிகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. அந்தந்த பணிக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பங்களை https://districts.ecourts.gov.in/sites/default/files/Employment notification for the post ofOffice Assistant Night watchman Masalchi Steno Typist Computer operator Sweeeper_0.pdf என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627 002 என்ற முகவரிக்கு மார்ச் 20ஆம் தேதிக்குள், தபாலில் மட்டும் அனுப்பவும்.

கல்வித்தகுதி, சம்பவளம், வயது வரம்பு, உள்ளிட்ட விவரங்களுக்கு http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும்.

newstm.in

Trending News

Latest News

You May Like