8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை... சம்பளம் ரூ.15700 முதல்..!
சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
பணியின் தன்மை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிய இயக்ககத்தில் பணிபுரியும் உயர் அலுவலர்களக்க அடிப்படைப் பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல் மற்றம் அலுவலக நடைமுறை பணிகளில் உதவிடுதல். சம்பளம்: ரூ.15700 - 50000 என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன். 01.07.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதயுடைய விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணபத்தினை www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து 8.3.2019 அன்று மாலை 5.45 மணிக்குள், இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்பப்பட வேண்டும்.
newstm.in