கனரா வங்கியில் வேலை காலியா இருக்கு... டிகிரி முடிச்சவங்க மிஸ் பண்ணிடாதீங்க!.
பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில், புரபேசனரி அதிகாரிகளுக்கான பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் காலியிடங்கள்: 800
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 1-10-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.)
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.708 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.118 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் நாள்: ஆன்லைன் தேர்வு 23-12-2018
விண்ணப்பிக்க கடைசிநாள்: 13-11-2018
மேலும் விவரங்களுக்கு: http://www.canarabank.com
newstm.in