10ஆம் வகுப்பு தேர்ச்சியா? ஆர்.பி.எஃப் பணிக்கு ஜன.1 முதல் விண்ணப்பிக்கலாம்!
ரயில்வே பாதுகாப்படை பணியில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
ரயில்வே பாதுகாப்படை பணியில் சேர20 முதல் 25 வயதுடைய 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், வரும் 2019 ஜனவரி 1ஆம் தேதி மூலம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி முறையில் எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு, மருத்துவ பரிசோதனை, மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 250 ரூபாயும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.01.2019. http://constable.rpfonline.org என்ற இணைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
newstm.in